Saturday, August 8, 2009

புதிய சிகல உறுமய தலைவர் வெள்ளைவேன் காரர்களால் மிரட்டப்பட்டாராம்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய சிகல உறுமய கட்சியின் தலைவர் சறத் மகேந்திரா வெள்ளைவேன் ஒன்றில் வந்த ஆயுததாரிகளால் மிரட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். சறத் மகேந்திரா அவர்கள் வெள்ளிக்கிழமை (07 ஆகஸ்ட) தனது கட்சி ஒன்று கூடல் ஒன்றை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது மாளிகாவத்தை பிரதேசத்தில் வைத்து வழிமறித்த வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆயுததாரிகள் தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிகக் கட்சியினால் அமைக்கப்படவுள்ள கூட்டுமன்னணியில் இணையும் முன்னெடுப்புக்களை கைவிடவேண்டும் எனவும், ஊடகங்களுக்கு சர்ச்சைக்குரிய தகவல்களை வழங்கக் கூடாது எனவும் ஆயுததாரிகள் மிரட்டியதாக அவர் மேலும் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment