Wednesday, August 5, 2009

நம்பகத் தன்மையற்ற அரசியல் கட்சிகள்

ஊவா மாகாண சபைத் தேர் தலிலும் யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைத் தேர்தலிலும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் போட்டி போட்டுக் கொண்டு பிரசாரம் செய்கின்றன.

ரணிலின் தலைமையிலேயே தமிழ் மக்கள் உரிமைகளைப் பெற முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் டீ. எம். சுவாமிநாதன் ஒரு கூட்டத்தில் பேசியிருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் மூலமே தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழ முடியும் என்று கூட்டமைப்புத் தலைவர்கள் பேசி வருகின்றார்கள்.

மக்களிடம் வாக்குக் கேட்கும் போது அம் மக்களுக்காக என்ன செய்தார்கள் என்பதை எடுத்துக் கூற வேண்டிய கடப்பாடு அரசியல் தலைவர்களுக்கு உண்டு.

இப்போதைய பாராளுமன்றத்துக்கான தேர்தல் 2004 ஆம் ஆண்டு நடைபெற்றது. அன்றிலிருந்து இன்றுவரை இவ்விரு கட்சிகளும் தமிழ் மக்களின் நலனுக்காக என்ன செய்தன என்பதையும் இப் போது என்ன செய்கின்றன என்பதையும் விளக்கமாக எடுத்துக் கூறி வாக்குக் கேட்பது தான் நியாயமானது.

ஆனால் இவ்விரு கட்சிகளும் அவ்வாறான விளக்கம் எதையும் தேர்தல் மேடைகளில் கூறவில்லை. கூறுவதற்கு எதுவும் இவற்றிடம் இல்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியே ற்ற பின் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவை அமைத்தார். இது இனப் பிரச்சினைக்கான தீர்வொன்றை நடைமுறைப் படுத்துவதற் கான குழுவல்ல.

எல்லா அரசியல் கட்சிகளினதும் ஆலோசனைகளைக் கேட்டறிந்து தீர்வுத் திட்டமொன்றைத் தயாரித்து ஜனாதிபதி யிடம் கையளிப்பதற்கான குழு. அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையொன்று நடைபெறும் பட்சத்தில் இத் தீர்வுத் திட்டம் அரசாங்க தரப்பு ஆவணமாக முன்வைக்கப்படலாம். ஒவ்வொரு அரசியல் கட்சியும் தீர்வு க்கான அதன் ஆலோசனையைச் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்குத் தெரிவிக்க வேண் டும் என்பதே எதிர்பார்ப்பு.

ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசியல் தீர்வுக்கான ஆலோசனைகளைச் சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு அனுப்பவில்லை. இனப் பிரச்சினையின் தீர்வில் உண் மையாகவே இக் கட்சிகளுக்கு அக்கறை உண்டென்றால் ஆலோசனைகளைக் குழுவுக்கு அனுப்பியிருக்க வேண்டும்.

அக்கறை இல்லாததால் இவற்றிடம் தீர்வுத் திட்டம் இல்லை. அதனால் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு ஆலோசனைகளை அனுப்பவில்லை.

இரண்டு கட்சிகளிடமும் அரசியல் தீர்வுக்கான திட்டம் எதுவும் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வுக்கான தீர்வுத் திட்டமொன்றை இனிமேல் தான் தயாரிக்கப் போகின்றதாம்.

இப்போதைய பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு ஐந்து வருட காலமாக அரசியல் தீர்வில் அக்கறை இல்லாமல் இருந்துவிட்டு இப்போது அது பற்றிப் பேசுகின்றார்கள். அரசியல் தீர்வு பற் றிப் பேசுவதற்காக ஜனாதிபதி அழைத்த ஒவ் வொரு சந்தர்ப்பத்திலும் அந்த அழைப்பை நிராகரித்துவிட்டு, ஜனாதிபதியுடன் பேசப் போவதாக இப்போது சொல்கின்றார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சி இன்று வரை இன பிரச்சினைக்கான அதன் தீர்வுத் திட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தீர்வுத் திட்டம் இருந்தால் தானே வெளிப்படுத்துவதற்கு. ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்த வரையில் இனப்பிரச்சினை சிறுபான்மையினரின் வாக்குகளுக்கான துரும்பு. அதற்குத் தீர்வு காணும் அக்கறை இக்கட்சிக்குச் சிறிதளவும் இல்லை.

இரண்டு கட்சிகளும் தமிழ் மக்களின் வாக்குகளைக் கேட்பதற்கு முன் தமது நம்பகத் தன்மையை நிரூபிக்க வேண்டும். அரசியல் வரலாற்றில் இனப் பிரச்சினைக்கான திட்ட மெதையும் முன்வைக்காததும் அரசியல் தீர் வுக்கான முயற்சிகளுக்குக் குந்தகமாகச் செய ற்பட்டு அவற்றைச் சீர்குலைத்ததுமான ஐக்கிய தேசியக் கட்சியும், அரசியல் தீர்வுக்காக எந்தக் காலத்திலும் கருத்தீடுபாட்டுடன் செய ற்படாததும் புலிகளுடன் சேர்ந்து தமிழ் மக்க ளுக்குத் தாங்கொணாத் துன்பத்தையும் பேர ழிவையும் ஏற்படுத்தியதுமான தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பும் இனப் பிரச்சினையைப் பொறுத்த வரையில் நம்பகத் தன்மையை வெளிப்படுத்துவது சாத்தியமில்லை.

தினகரன் ஆசிரியர் தலையங்கம்

No comments:

Post a Comment