Monday, August 3, 2009

உலகத் தமிழர் பத்திரிகை வீழ்ச்சி. கனடா மக்கள் மனங்களில் பெருமாற்றம்.

கனடாவில் இருந்து வெளிவரும் புலிகளின் பிரச்சார பத்திரிகையின் விற்பனையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வாரம் ஒருமுறை வெளிவரும் உலகத் தமிழர் பத்திரிகையை பெறும் வாசகர்கள் வருடம் ஒன்றிற்கு 45 கனடிய டொலர்கள் செலுத்தி இப்பத்திரிகையை படித்து வந்தனர். ஆனால் அண்மைக்காலமாக வாசர்களில் பலர் தமது சந்தாக்களை நிறுத்தியுள்ளதுடன் தமக்கு இப்பத்திரிகைச் செய்திகளில் நாட்டம் இல்லை என தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தனது சந்தாவை நிறுத்தி உலகத் தமிழர் பத்திரிகையை வாங்குவதை நிறுத்தி கொண்ட வாசகர் ஒருவர் தகவல் தருகையில், நான் கடந்த பல ஆண்டுகளாக இப்பத்திரிகையை வாசித்துவந்தேன். இலங்கை யுத்த நிலைமைகள் தொடர்பாகவும், தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பான செய்திகளையும் இதனூடாக அறிந்து வந்தேன். ஆனால் அங்கு யுத்தம் முற்றாக முடிவுற்றும் தமிழர் அரசியல் தொடர்பாக அறிவதற்கு எதுவும் இல்லை என உணர்ந்ததாலும் எனது வீட்டிற்கு பத்திரிகை போட வருபவரிடம் எனது முடிவை தெரிவித்தேன். அவர் அதை மிகவும் பண்பாக ஏற்றுக்கொண்டார் என்றார்.

No comments:

Post a Comment