Monday, August 3, 2009

வன்னியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு 3 ஆண்டுகள் தேவை: கண்ணிவெடி அகற்றும் இந்தியக் கம்பனியின் பணிப்பாளர்

வன்னியை குடியிருப்புக்கான பகுதியாகப் பிரகடனப்படுத்த 3 ஆண்டுகள் தேவையென கண்ணிவெடி அகற்றும் இந்தியக் கம்பனியின் ஓய்வுபெற்ற பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கே.பூரி தெரிவித்துள்ளார்.

வடபகுதியில் கண்ணிவெடிகளை அகற்ற ஒன்டரை முதல் இரண்டு வருடங்கள் தேவையெனக் கூறிய அவர், இதன் பின்னர், வன்னியை குடியிருப்புக்கான பகுதியாகப் பிரகடனப்படுத்த மேலும் ஒரு வருடம் தேவையெனவும் குறிப்பிட்டார்.

வடபகுதியில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக 80க்கும் அதிகமான இந்திய முன்னாள் படையினர் குழுவொன்று கொழும்புக்கு புறப்பட்டிருக்கின்றனர். இந்தக் குழுவினர் இலங்கையில் ஏற்கனவே கண்ணிவெடிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்தியர்களுடன் இணைந்து செயற்படுவார்களெனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment