Thursday, August 20, 2009

13+ நடைமுறைப் படுத்தப்படுமென இந்தியாவிற்கு ஜனாதிபதி உத்தரவாதமளித்துள்ளார். -பைலா-

இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக கடந்த ஜனவரி மாதம் 27ம் திகதி நாட்டின் ஜனாதிபதி இந்தியா அரசிற்கு உத்தரவாதம் அளித்துள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் குசைன் பைலா தெரிவித்துள்ளார்.

நேற்று 20ம் திகதி பாராளுமன்ற அமர்வின் போது, கடந்த ஜனவரி மாதம் 27ம் திகதி இலங்கை அரசு இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி உடன் செய்து கொண்ட ஒப்பமந்தம் யாது? என ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் திசாநாயக்க எழுப்பிய கேள்விக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து பதிலளித்த, பிரதி வெளிவிவகார அமைச்சர் குசைன் பைலா, மேற்கண்ட உறுதி மொழியை ஜனாதிபதி இந்திய அரசிற்கு வழங்கியுள்ளதுடன், 13ம் திருத்தச்சட்டத்திற்கு அப்பால்சென்று (13+) பொருத்தமான தீர்வொன்றை வழங்குவதாகவும் உறிதியளித்துள்ளார் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment