Wednesday, August 19, 2009

வாஸின் மகன் சிறைச்சாலைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றார். 13ம் சந்தேக நபரும் கைது.

தகவல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் நிபுண ராமநாயக்க தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான எஸ்.எஸ்.பி யின் மகன் ரவிந்து குணவர்த்தன களுபோவில வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டு சிறைச்சாலைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றார்.

அதே நேரம் இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு பொலிஸ் காண்டபிள் இன்று கடுவல நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 31ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இச்சமப்பவத்தின் சந்தேக நபர்கள் பட்டியலில் எஸ்.எஸ்.பி வாஸ் குணவர்த்தனவின் பெயர் இணைக்கப்படாதது குறித்து நீதிவான் கேள்வி எழுப்பியபோது பதிலளித்த பொலிஸார், வாஸ் குணவர்த்தன இச்சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதற்கான எவ்வித சான்றுகளும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment