Monday, August 17, 2009

மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர்கள் 11 பேரையும் விளக்க மறியிலில் வைக்க உத்தரவு.

தகவல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் நிப்புண ராமநாயக்க தாக்கப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் உட்பட 11 பேரை கடுவல நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம் 12ம் சந்தேக நபராக நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட எஸ்எஸ்பி வாஸ் குணவர்த்தனவின் மகன் ரவிந்து குணவர்த்தன களுபோவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் அவர் தொடர்பான வைத்திய அறிக்கையை மன்றிற்கு சமர்ப்பிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment