Monday, August 17, 2009

1000 ரூபாவிற்கு குழந்தையை விற்ற தாயும் நான்கு வைத்தியசாலை ஊழியர்களும் கைது.

தனது குழந்தையை பிறந்து சில மணி நேரங்களில் 1000 ரூபாவிற்கு விற்ற தாயையும் அக்குழந்தையை விற்பதற்கு உதவிய நான்கு வைத்தியசாலை ஊழியர்களையும் காலிப்பொலிஸார் கைது செய்துள்ளனர். குழந்தையின் தாயின் தாயார்(பாட்டி) பத்தேகம பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்தே இக்கைது இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலை ஊழியர் ஒருவரின் கணவரே குழந்தையை எடுத்துச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குழந்தையை எடுத்துச் சென்ற நபர் அக்குழந்தையை அதிக பணத்திற்கு விற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

No comments:

Post a Comment