Monday, July 27, 2009

கையடக்கத் தொலைபேசி வடிவில் துப்பாக்கி! பாதுகாப்புத் தரப்புக்கு எச்சரிக்கை!!

கையடக்கத் தொலைபேசி வடிவத்தில் புதிய ரகத் துப்பாக்கிகள் உலக சந்தைக்கு வந்துள்ளதால் பாதுகாப்புப் பிரிவினர் எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது. கையடக்கத் தொலைபேசி வடிவத்திலும் அதன் அளவிலும் புதிய ரக துப்பாக்கிகள் உலகச் சந்தைக்கு வந்துள்ளன. அவை விரைவில் இலங்கைக்கும் கொண்டுவரப்படலாம். எனவே பாதுகாப்புப் பிரிவினர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பாதுகாப்பு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கி 0.22 மில்லிமீற்றர் வகை துப்பாக்கி ரவைகளைக் கொண்டுள்ளது. இதற்கு நான்கு ரவைகள் பயன்படுத்தப்படுகின்றன. தொலைபேசியில் உள்ள ஒரு இலக்கத்தை அழுத்துவதன் மூலம் துப்பாக்கி இயக்கப்படுகிறது. ரவைகள் துப்பாக்கியின் முன்பகுதியால் வெளியேறும் தன்மை கொண்டது எனவும் தெரிவித்துள்ளது.

இந்த வகை துப்பாக்கிகள் பிரித்தானியாவின் சந்தைகளில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அறியப்படுகிறது.

துப்பாக்கியின் இயக்கம் மற்றும் வடிவமைப்பு வீடியோ காட்சிக்கு இங்கு அழுத்தவும்.




No comments:

Post a Comment