Thursday, July 23, 2009

இரு மாணவிகள் தற்கொலை முயற்சி.

கொழும்பு பிரபல பாடசாலை ஒன்றில் 9ம் தரம் படிக்கும் இரு மாணவிகள் நேற்று தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, பாடசாலை மாணவிகள் நான்கு பேர் கையடக்க தொலைபேசிகளை வைத்திருந்தமை மாணவத் தலைவியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் அறிந்த அதிபர் அவ் நால்வரையும் தமது காரியாலயத்திற்கு அழைத்தபோது சிறு இடைவெளி ஒன்றை எடுத்துக்கொண்டு மலசல கூடத்திற்கு சென்ற மாணவி 20 நிமிடங்களுக்கு மேலாக திரும்பாமையையிட்டு அப்பகுதிக்கு சென்ற பாடசாலைக் காவலாளி அம்மாணவி அங்கு தனது கழுத்தில் சுருக்கிட்டு தொங்கிகொண்டிருப்பதை கண்டுள்ளார்.

மேலுமொரு மாணவி அவ்வாறு சிற்றுண்டிச்சாலைக்குச் சென்று அங்கிருந்த போத்தல் ஒன்றை எடுத்து தனக்குதானே குத்தி காயப்படத்திக் கொண்டுள்ளார். அவ்விருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment