Wednesday, July 22, 2009

இடைத்தங்கல் முகாமில் பெண்ணொருவரை விடுவிக்க முயற்சித்த இராணுவச் சிப்பாய் கைது

இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள யுவதி ஒருவரிடம் 25,000 ரூபா பணத்தைப் பெற்று அவரை விடுவிக்க முயற்சித்த இராணுவச் சிப்பாய் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வவுனியா, செட்டிக்குளம், ஆனந்த குமாரசுவாமி இடைத்தங்கல் முகாமில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் மூலம் இந்த ஊழல் மோசடி அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இராணுவ உத்தியோகத்தரை சரீர பிணையில் விடுதலை செய்துள்ளதாகவும், எதிர்வரும் 28ம் திகதி மீண்டும் விசாரணைகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment