Thursday, July 9, 2009

சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தனது பணிகளை மட்டுப்படுத்தவுள்ளது.

விடுதலை புலிகளுடனான யுத்தத்தில் வெற்றியீட்டிதன் பின்பு இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தனது பணிகளை மட்டுப்படுத்தவுள்ளதாக தெற்காசிய நாடகளுக்கான சர்வதேச செஞ்சிலுவை சங்க நடவடிக்கைகளுக்கு பொறுப்பான ஜக்கஸ் டி மோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறுவகையான மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டுவந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கம் யுத்தம் நிறைவடைந்ததன் பின் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தனது பணிகளை மட்டுப்படுத்தும் முதல் நடவடிக்கையாக கிழக்கு மாகாணத்தில் உள்ள பணிமனை செயற்பாடுகளை இடைநிறுத்தி தனது வெளிநாட்டு பணியாளர்களை கிழக்கு மாகாணத்தில் இருந்து அழைக்கவுள்ளது என்று குறிப்பிட்டதுடன் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கையுடன் தொடர்ந்து செயற்படுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment