Tuesday, July 14, 2009

நான் பிரபாகரனை உயிருடன் சந்தித்திருந்தால் ஏன் இவ்வாறு பயித்தியகார தனமான வேலைகளை செய்தீர் எனக் கேட்டிருப்பேன் -ஜனாதிபதி

ரைம்ஸ் சஞ்சிகையின் நிருபர் யோதி ரொட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் சந்தித்திருந்தால் என்ன கேட்டிருப்பீர்கள் என கேட்டபோது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ புன்னகைத்தவாறு நான் பிரபாகரனை உயிருடன் சந்தித்திருந்தால் ஏன் இவ்வாறு பயித்தியகார தனமான வேலைகளை செய்தீர் என கேட்டிருப்பேன். இதைவிட வேறு என்ன கேட்கமுடியும் என வினவியதாக என ரைம்ஸ் சஞ்சிகையின் நிருபர் கூறினார்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடனான ரைம்ஸ் சஞ்சிகையின் நிருபரின் பேட்டியின் தொகுப்பு

ரைம்ஸ்: பிரபாகரன் கொல்லப்பட்டதை கேள்விப்பட்டதும் உங்கள் மனம் எவ்வாறு இருந்தது?

ஜனாதிபதி: இறைவனுக்கு நன்றியை தெரிவித்தேன். அது ஒரு வரப்பிரசாதம்

ரைம்ஸ்:அவர் எவ்வாறு கொல்லப்பட்டார்?

ஜனாதிபதி: அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது தெரியும். அவ்வளவுதான். அவர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது பற்றி கண்டுபிடிப்பதற்கு எனக்கு ஆர்வமில்லை. அவர் தற்போது இல்லை என்பதே முக்கியமான விடயம். அவரை இங்கு கொண்டுவந்து கதைப்பதற்கு ஆசைப்பட்டேன். நான் ஒருபோதும் அவரை பார்த்ததில்லை.

ரைம்ஸ்: இறுதி யுத்த சந்தர்பத்தில் யுத்தநிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவும் ,ஜரோப்பிய நாடுகளும் கொடுத்த அழுத்தத்தையும் மீறி இறுதியுத்தத்தில் ஈடுபட்டீர்கள். இது தெடர்பாக பல்வேறு அழுத்தங்களுக்கு முகம்கொடுத்துள்ளீர்கள் இது தொடர்பாக என்ன நினைக்கின்றீர்கள்?

ஜனாதிபதி: அமெரிக்காவும் ,ஜரோப்பிய நாடுகளும் குறுகிய மனப்பாண்மை கொண்டவை என நான் கருதவில்லை. அவர்களே பயங்கரவாதத்தை அழிப்பதற்கு ஊக்கமளித்தவர்கள். நாங்கள்
ஜோஜ் புஸ்சை பின்பற்றினோம். அவருக்கு தேவையானதை நாங்கள் நிறைவேற்றினோம். அவர்கள் எங்களை பாராட்ட வேண்டும். நாங்கள் அவர்களுடைய யுத்தத்தை முன்னெடுத்தோம். பயங்கரவாதத்தை தோற்கடிக்கலாம் என நாங்கள் காண்பித்தோம்.

ரைம்ஸ்: யுத்தத்தின் கடைசிகட்டத்தை பொதுமக்களை பாதுகாப்பதற்காக ஒரு பரீட்சார்த்த களமாக கருதியிருக்கவேண்டும் என வெளிநாட்டு கொள்கை ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்?

ஜனாதிபதி: எனது நாட்டு மக்கள். நான் அவர்களுக்கு பொறுப்புக் கூறவேன்டியவன். அவர்களை பாதுகாத்து பாதுகாப்பாக வெளியே கொண்டவருவது எனது பொறுப்பு. இந்த வேலையை செய்வதற்கு சர்வதேச நாடுகளை அழைத்திருந்தால் அவர்கள் பெரும்பாலான மக்களை கொன்றிருப்பார்கள். ஆகவே எனது படைவீரர்களே எனது மக்களை பாதுகாத்தார்கள். அவர்கள் எனது மக்கள், எனது வாக்காளர்கள். எனவே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகம் உதவிகளை செய்யவேண்டும்.

ரைம்ஸ்: மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு அரசாங்கம் அம்மக்களுக்கு எதிராக செயற்பட்டால் என்ன செய்வது?

ஜனாதிபதி: அதற்காக எல்லா மக்களையும் தண்டிக்கப்போகின்றீர்களா? அல்லது அதற்கு பொறுப்புக் கூறவேன்டியவர்களையா? இப்போது என்னை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் மகிந்த ராஜபக்ஸவை தண்டிக்கப்போகின்றீர்களா? அல்லது தடைகள் முட்டுக்கட்டைகள், பயணக்கட்டுப்பாடுகள் என்பவற்றால் மக்களை தண்டிக்கப்போகின்றீர்களா? என்னை தண்டிப்பதாயின் அதற்கும் வழியண்டு. இப்படிசொல்வதற்காகவும் நான் தண்டிக்கப்படலாம் (சிரிக்கின்றார்)

ரைம்ஸ்: இறுதி யுத்தத்தை முடிக்கும் போது மனிதஉரிமை மீறல், பொதமக்கள் அழிவு என்பன உச்சச்கட்டத்தில் இருந்ததாக பலரும் கருதுகின்றார்களே?

ஜனாதிபதி: நான் இதனை முற்றாக நிராகரிக்கின்றேன். மனிதஉரிமை மீறல்கள் ஒருபோதும் இடம்பெறவில்லை. பொதுமக்கள் அழிவு இடம்பெறவில்லை. அப்படி செய்வதாக இருந்தால் இந்ந யுத்தத்தை முடிப்பதற்கு எமக்கு இரண்டரை வருடங்கள் தேவைப்பட்டிருக்காது. ஓருசிலமணி நேரத்தில் இந்ந யுத்தத்தை முடித்திருக்கலாம். இவை எல்லாம் பொய்பிரசாரங்கள்.

ரைம்ஸ்: ஏழாயிரம் பேர்கொல்லப்பட்டதாக கருதப்படுகின்றது?

ஜனாதிபதி : ஏழாயிரம் பேரா? ஒருபோதும் இல்லை. கிழக்கில் ஒரு இழப்பும் இல்லை. அதுபோல் வடக்கில் ஒரு இழப்பும் இல்லை என கூறமாட்டேன். தப்பமுயன்ற சிலரை விடுதலை புலிகள் சுட்டுக் கொன்றனர்.


ஜனாதிபதியிடம் மீள குடியமர்த்துதல் அரசியல் தீர்வு தொடர்பாக வினவப்பட்டபோது

இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் மூன்று லட்சம் மக்கள் உள்ளனர். விடுதலை புலிகள் வடக்கின் எல்லா இடங்களிலும் கண்னிவெடிகளை புதைத்து வைத்திருக்கின்றார்கள். அவற்றை முதலில் அகற்றவேண்டும். எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஆக குறைந்தது 50வீதமானவர்களை (60 வீதம் என்றே சொல்லலாம்) அவர்களின் சொந்த இடங்களுக்கு மீள குடியமர்தப்படுவர் என தெரிவித்த ஜனாதிபதி இன அடிப்படையில் தனி தனி பிரதேசங்களை வழங்காமல் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கி அவர்களே அப்பிரதேசங்களை நிர்வகிக்கமுடியும் என தெரிவிர்தார்.

No comments:

Post a Comment