Monday, July 13, 2009

ஊடக சுதந்திரத்தை நசுத்கும் எந்த செயலையும் ஐ.தே.க எதிர்க்கும்.

ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்துமுகமாக பாராளுமன்றிற்கு கொண்டுவரப்படும் எந்த விடயத்தையும் உணர்வுடன் கடுமையாக எதிர்ப்பதென ஐ.தே.க முடிவெடுத்துள்ளதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் பா.உ கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் இருந்து ஊடகவியலாளர்களுடன் பேசிய அவர், ஊடக சுதந்திரத்தை காப்பதாக கூறிய அரசு அச் சுதந்திரத்தை மறுக்க முனைகின்றது. இவ்விடயத்தில் தாம் சகல கட்சிகளையும் இணைத்து ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த போவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment