Friday, July 17, 2009

இலங்கையின் ஊடகச் சூழல் எதிர்நோக்கும் இடர்பாடுகள் களையப்பட வேண்டும்

இலங்கையின் ஊடக சுதந்திரத்திற்கான சர்வதேச குழு. -அறிக்கை-
ஊடகங்களுக்கெதிராக பாரியளவில் அதிகரித்து வரும் வன்முறைகள் தொடர்பாக சர்வதேச ஊடக சமூகத்தின் பிரதிநிதிகளைக் கொண்ட இலங்கையின் ஊடக சுதந்திரத்திற்கான சர்வதேச குழு தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணை, கைதுசெய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் அந்தக் குழு முன்வைத்துள்ளது.

இலங்கையின் ஊடகச் சூழல் எதிர்நோக்கும் இடர்ப்பாட்டை களையுமுகமாக ஊடக சுதந்திரத்திற்கான சர்வதேசக் குழு 11 அம்சங்களடங்கிய திட்டத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது.

No comments:

Post a Comment