Sunday, July 19, 2009

வவுனியாவில் புளொட் ஆதரவாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

வவுனியா காத்தான்கோட்டம் நெலுங்குளம் பிரதேசத்தில் நேற்றிரவு புளொட் ஆதரவாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. நேற்றிரவு மூச்சக்கர வண்டியொன்றில் சென்ற நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் இவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இவரது மனைவி மகள் ஆகியோரும் காயமடைந்துள்ளனர்.

மகேஸ்வரன் என அறியப்பட்ட இவர் மீது தாக்குதல் நாடாத்தியோர், எதிர்காலத்தில் அவரை புளொட் இயக்கத்தின் காரியாலயத்திற்கு செல்லக்கூடாது எனவும் புளொட் இயத்கத்தினருக்கான பிரச்சார வேலைகளில் ஈடுபடக்கூடாது எனவும் எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

தாக்குதல்தாரிகளை கண்டுபிடிக்க விசாரணைகளை முடிக்கி விட்டுள்ள பொலிஸார் இது அரசியல் குரோதம் காரணமாக அங்கு செயற்படும் பிறிதொரு தமிழ் அரசியல் கட்சியின் திட்டமிட்ட செயற்பாடாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். அத்துடன் தாக்குதல்தாரிகள் இவர் தொடர்பாக அவதூறு பிரச்சாரங்களை அவிட்டுவிட முயற்சிப்பதாகவும் வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment