Saturday, July 18, 2009

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் பலாத்காரமாக திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள்.

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அவர்களது விருப்பிற்கு மாறாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படமாட்டார்கள் என நீதி அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பகிரங்க நிகழ்வொன்றில் இவ்வாறு தெரிவித்த அவர், மாநில அரசிற்கோ அன்றில் மத்திய அரசிற்கோ அம்மக்களை பாலாத்தகாரமாக அனுப்பும் எண்ணம் கிடையாது எனவும் அவர்கள் விரும்பி தாமாகவே செல்ல முற்பட்டால் அதை நாம் தடுத்து நிறுத்த மாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment