Friday, July 10, 2009

துவாரகாவின் உடலைத் தேடிச் செல்லும் படையினர்.

படையினரிடம் சரணடைந்துள்ள புலிகளில் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் பிரபாகரனது மகள் துவாகராவின் உடலை தோண்டி எடுக்க படையினர் விரைவதாக உள்ளகத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. துவாரகா சோதியா படையணியில் லெ.கேணல் தரத்தில் இருந்ததாகவும் கடந்த மே மாதம் 12ம் இடம்பெற்ற தாக்குதலில் ஆட்லறி செல்வீச்சுக்கு இலக்காகி மரணமடைந்ததாகவும், அவரது உடல் புதுமாத்தளனில் உள்ள பிரதேசம் ஒன்றில் புதைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட புலி உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அவரின் தகவலை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரையும் படையினர் துவாரகாவின் சடலத்தின் எச்சங்கள் எவற்றையாவது கைப்ற்றின் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி பிரபாகரனது மரபணுவுடன் ஒப்பிட்டு உறுதி செய்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment