Saturday, July 25, 2009

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்பு. காமுகன் அடித்துக்கொலை.

மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது மாணவி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்து கொலை செய்த நபரை பிரதேச மக்கள் அடித்துக்கொலை செய்துள்ளனர். மாணவியை கொலைசெய்து அவரது உடல்மீது பாறாங்கல் ஒன்றை ஏற்றி வைத்துவிட்டு தலைமறைவாகியிருந்த மேற்படி நபர் அப்பிரதேச்தில் இருந்து தப்பிச் செல்வதற்காக முயற்சித்தபோது பிரசேத்தில் உள்ள தமிழ்-சிங்கள மக்களால் இனங்காணப்பட்டு அவ்விடத்திலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கொலை செய்யப்பட்டிருந்த மாணவி மோகன் மதுனிஸ்காவின் இறுதி நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான தமிழ்-சிங்கள மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment