Saturday, July 11, 2009

வவுனியாவில் களைகட்டும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் புளொட் தலைவர் சித்தார்த்தன்.

வவுனியாவில் இடம்பெற இருக்கும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலுக்கான பிரச்சார வேலைகளை தமிழீழ விடுதலைக் கழகத்தினர் ஆரம்பித்துள்ளாதாக தெரியவருகின்றது. கடந்தவாரம் வவுனியா சென்றிருந்த புளொட் அமைப்பின் தலைவர் திரு. த. சித்தார்த்தன் அவர்கள் வவுனியாவில் உள்ள மக்களை சந்தித்து தாம் எதிர்கொள்ளப்போகும் தேர்தல் தொடர்பாக மக்களுக்கு விளக்கியுள்ளதுடன், அவர்களது கருத்துக்களையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

ஓரு வாரகாலமாக வவுனியா ஆனகோவில்குளம், இறம்பைக்குளம், வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தமது அரசியல் அலுவலகங்களில் தங்கியிருந்த தலைவர் சித்தார்த்தனை பெருந்திரளான மக்கள் சென்று சந்தித்துள்ளனர். இச்சந்திப்புக்களில் அவ்வமைப்பின் சர்வதேச அமைப்பாளர் ஆனசிவநேசன் பவன், வவுனியா ஊள்ளுராட்சி மன்றத்தேர்தலின் முதன்மை வேட்பாளர் ஜி.டி லிங்கநாதன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.




No comments:

Post a Comment