Wednesday, July 15, 2009

வவுனியா நகரின் பாதுகாப்புக் கெடுபிடிகள் தளர்வு

வவுனியா நகரில் இதுவரை காலமும் இருந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் சற்றுத் தளர்த்தப்பட்டுள்ளது. வவுனியா நகரின் சில இடங்களில் அமைக்கப்பட்டிருந்த காவலரண்கள் அகற்றப்பட்டிருக்கும் அதேவேளை, தேக்கம்காடு முதல் மூன்று முறிப்பு வரையில் மேற்கே பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலிகள் அகற்றப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், அடுத்த சில தினங்களில் மதவாச்சி சோதனை நிலையத்தின் ஊடான போக்குவரத்திலும் தளர்வுகள் ஏற்படுத்தப்படுமெனவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

வவுனியா நகரசபைத் தேர்தலை முன்னிட்டே, இந்தப் பாதுகாப்புக் கெடுபிடிகள் தளர்த்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

No comments:

Post a Comment