Tuesday, July 28, 2009

பண்டாரிக்குளத்தில் கொள்ளையில் ஈடுபட்ட ஈபிடிபி யினர் கைது.

வவுனினியா, பண்டாரிடிக்குளப் பிரதேசத்தில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் பிரதேச மக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இற்றைக்கு மூன்று தினங்களுக்கு முன்னர் மோட்டார் பைசிக்கிளில் வந்தவர்களால் அப்பிரதேசத்தில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக பொலிஸில் பதிவாகியிருந்துள்ளது.

அதே நேரம் நேற்று பிற்பகல் மேற்படி மோட்டார் சைக்கிள் பிரதேசத்தினுள் சுற்றித்திருந்தபோது மக்கள் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கியதுடன், மக்களும் ஒன்று சேர்ந்து உசார் அடைந்துள்ளனர். பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து மோட்டார் கைக்கிளில் வந்தவர்களை கைது செய்ய முற்பட்டபோது ஒருவர் தம்பியோட, ஒருவர் பிடிபட்டுள்ளார். அவரிடமிருந்து கிரேனேட் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டள்ளதுடன், ஓடியவரது கைத்துப்பாக்கி கீழே விழுந்து கிடந்து மக்கள் அதை பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் வேலு யோகன, நிலையாமோட்டை பூவரசங்குளம் எனும் விலாசத்தை நேர்ந்தவர். இக்கொள்ளைக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் HERO HONDA Mp GQ 0984 எனும் இலக்கம் கொண்டதாகும்

கைது செய்யப்பட்டுள்ள மேற்படி நபர் ஈபிடிபி அமைப்பைச் சேர்ந்தவர் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment