Saturday, July 11, 2009

மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவின் கொலையின் பிரதான சந்தேக நபர் தடுப்புக்காவலில். சிஐடி

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரி சில நாட்களுக்கு முன்னர் ஓமந்தைப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக நேற்று (10 யூலை) குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அனுராதபுரம் பிரதான மஜிஸ்திரேட் ருஜிரா வெலிவத்த அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து சந்தேக நபருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரனால் விசேட கைத்துப்பாக்கி ஒன்றும் சில பரிசில் பொருட்களும் ஒரு லட்சம் ரூபா பணமும் சன்மானமாக வழங்கப்பட்டமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக சீ.ஐ.டி யினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இவ்வழக்கில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள ஆறு பேரையும் அனுராதபுர சிறையில் விசேட பாதுகாப்பில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment