Wednesday, July 8, 2009

கனடியப் பிரஜைகளும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வன்னியில் யுத்தம் முடிவுற்றபோது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப் பட்டுள்ளவர்களுள் கனடியப் பிரஜைகளும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் புலிகளியக்கம் முற்றாக தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு முதலாவது உத்தியோ பூர்வ விஜயம் மேற்கொண்டு வந்துள்ள கனடிய வெளிவிவகார அமைச்சின் செயலர் Mr. Deepak Obhrai, புலிகளியக்க உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம் ஒன்றில் கனடியப் பிரஜை ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கனடிய National Post பத்திரிகைக்கு அவர் கூறுகையில், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் யார் என்பதை இலங்கை அரசு எமக்கு தெரியப்படுத்தியுள்ளது. அவரை நாம் அடையாளம் கண்டுள்ளோம். புனருத்தாபன முகாம்கள் எனப்படும் முன்னனைநாள் விடுதலைப் புலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரத்தியேக முகாம் ஒன்றில் அவர் உள்ளார் என கூறியுள்ளார்.

ஆனால் இவ்வாறு 4 கனடியப் பிரஜைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. புலிகளை தடுத்து வைத்துள்ள முகாம்களைத் தவிர பொதுமக்கள் தங்கியுள்ள முகாமொன்றில் கனடியப் பிரஜை ஒருவரை தான் சந்தித்துள்ளதாக கூறியுள்ள Deepak Obhrai, அந்நபர் தற்போது கனடிய தூதுவராலயத்தை தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர்கள் அவரின் விடுதலைக்குரிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்ததுடன் ஏனையவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டார் என்ற குற்றத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரை பார்வையிடுதற்கு Mr.Deepak Obhrai க்கு அனுமதி அளிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்நபர் எப்போது விடுதலை செய்யப்படுவார் என இலங்கை அரசை தான் வேண்டியபோதிலும் அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அவரது விடுதலை தாமதமாகின் அவரை கனடிய நீதிமன்றில் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு தாம் சிறிலங்கா அரசிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக University of Ottawa எனும் பல்கலைக்கழகத்தின் international law professor Errol Mendes தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment