Tuesday, July 21, 2009

அம்பாறை மாவட்டத்தில் தற்கொலை அதிகம்.

இலங்கையில் இடம்பெறுகின்ற தற்கொலை, தற்கொலை முயற்சிகள் அம்பாறை மாவட்டத்தில் மிகவும் அதிகமாக காணப்படுவதாக அம்பாறை வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியர் லங்காதிலக ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

2008ம் ஆண்டு தற்கொலை முயற்சி செய்த 635 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதில் 46 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், இச்சிகிச்சைகளின் நிமித்தம் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு 20 மில்லியன் ரூபாய்களைச் செலவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன் மாவட்டத்தில் உள்ள கல்வியறிவு குறைபாடு, வேலையில்லா திண்டாட்டத்தால் ஏற்பட்டுள்ள மன அழுத்தம், இளைஞர்களுக்கு பல காரணங்களாலும் ஓய்வில்லாமை போன்றனவே தற்கொலை முயற்சிக்கான பிரதான காரணங்களாக அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment