Monday, July 13, 2009

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவை அரசாங்கம் இடைநிறுத்தவேண்டும்: ஜே.வி.பி

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவை உடனடியாக இலங்கை அரசாங்கம் இடைநிறுத்தவேண்டுமென கோரிக்கை விடுத்திருக்கும் ஜே.வி.பியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, பொதுமக்களின் பணத்தை செலவிட்டு அதிக எண்ணிக்கையான கூட்டங்களை நடத்தி தீர்மானங்கள் எதனையும் எட்டாத இந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தேவையற்றதெனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தீர்வு யோசனையை விரைவாக தயாரித்துமுடிப்பதற்கு தீர்மானித்திருப்பதாக அந்தக் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண குறிப்பிட்டார்.

இதுவரையில், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவானது 121 தடவைகள் கூடி ஆலோசனை நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com