Friday, July 17, 2009

மக்களுக்கு வழங்கிய இரு அதிநவீன குளிரூட்டி வண்டிகளை காட்டில் ஒழித்து வைத்த அமைச்சர் கருணா

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சேவா லங்கா எனப்படும் அரச சார்பற்ற நிறுவனம் கிழக்கு மீன்பிடித் தொழிலாளர்களின் தொழில் அபிவிருத்திக்காக இரு அதிநவீன குளிரூட்டி வண்டிகளை அமைச்சர் முரலிதரன் அவர்கள் ஊடாக வழங்க முற்பட்டுள்ளது.

இவ்வண்டிகளை பெற்றுக்கொண்ட அமைச்சர் அவற்றை மட்டக்களப்பை அண்டிய காட்டுப்பிரதேசம் ஒன்றில் தனது நெருங்கிய சகாக்களின் உதவியுடன் மறைத்து வைத்திருந்தமை வெளிவந்துள்ளது. இவ் இரு வண்டிகளையும் கைப்பற்றிய பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், இவ் வண்டிகள் கருணாவின் பிரத்தியேக செயலாளராக செயற்பட்டுவரும் சாந்தினி எனும் பெரும்பாண்மையின பெண்ணது சகோதரனுக்கு அன்பளிப்புச் செய்யும் பொருட்டு அவை அவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருந்தமை புலனாகியுள்ளது.

அவ் வண்டிகள் இரண்டும் கிழக்கு மாகாணசபையிடம் ஒப்படைக்கப்பட்டு அவை உரிய முறையில் மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment