Friday, July 31, 2009

நல்லூர்த் திருவிழாவை முன்னிட்டு விமானக் கட்டணம் குறைப்பு

நல்லூர்த் திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திற்கும், கொழும்பிற்கும் இடையிலான விமானப்படையினரின் விமானசேவைக் கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, விமானப் படையினரின் விமானத்தில் பயணிக்கும் பொதுமக்களிடமிருந்து, எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரையான காலப்பகுதியில் 17 ஆயிரம் ரூபா கட்டணம் அறிவிடப்படவிருப்பதாகவும் சுற்றுலா ஊக்குவிப்பு அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். அத்துடன், தினமும் 5 தடவைகள் விமானப்படையினரின் விமானசேவை நடத்தப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்திற்கும், கொழும்பிற்கும் இடையிலான விமானப் படையினரின் விமானசேவை கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விமானப்படையினரின் விமானசேவையானது வாரத்திற்கு 3 தினங்கள் நடைபெறுமெனத் அறிவிக்கப்பட்டிருந்ததுடன், யாழ்ப்பாணத்திற்கும், கொழும்பிற்கும் இடையிலான இருவழிப் பயணத்திற்கான கட்டணமாக 19ஆயிரத்து 100ரூபா அறவிடப்படுமெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நல்லூர்த் திருவிழாவை முன்னிட்டு, இரண்டாயிரத்து 100 ரூபாவால் விமானப்படையினரின் விமானசேவைக் கட்டணம் குறைக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment