Monday, July 27, 2009

இலங்கையில் புதிய இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகம். -அமைச்சின் செயளாளர்-

1972ம் ஆண்டிலிருந்து பாவனையில் இருக்கும் அடையாள அட்டைக்கு பதிலாக புதிய இலத்திரனியல் அடையாள அட்டை இவ்வாண்டு டிசம்பரில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்ப்படுகின்றது.

இது தொடர்பாக உள்நாட்டு நிர்வாக அமைச்சின் செயலாளர் டாக்டர் உபநந்த விதானபத்திரன கருத்து தெரிவிக்கையில், புதிய இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகம் செய்வதற்கான கேள்விதாரர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதற்கமைய இவ்வாண்டு டிசம்பரில் புதிய இலத்திரனியல் அடையாள அட்டை பாவனைக்குவரும் என தெரிவித்தார்.

ஆரம்பத்தில் இத்திட்டம் உலகவங்கியின் நிதிஉதவியுடன் மேற்கொள்ளுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதில் ஏற்பட்ட தாமதத்தினால் தற்போது இலங்கை அரசே அதற்கான முழு செலவாகிய 480 கோடி ரூபாவையும் ஏற்றுக்கொண்டுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்படும் இலத்திரனியல் அடையாள அட்டையானது முற்றுமுழுதாக கணணி மயப்படத்தப்பட்டு உறுதிப்படுத்தல் அத்தாட்சிக்காக மத்திய தரவுத்தளத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த அடையாள அட்டையில் குறிப்பிட்ட நபரின் தனிப்பட்ட தகவல்கள் சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் குறிப்பிடபட்டிருப்பதுடன் குறிப்பிட்ட நபரின் கைரேகை பிரதியும், புகைப்படமும் இணைக்கப்பட்டிருக்கும்.

இவ்வடையாள அட்டைக்கு பொதுமக்களிடம் இருந்து அறவிடப்படும் தொகை இன்னும் தீர்மானிக்கப்பட வில்லை என தெரிவித்த செயளாலர் இந்த இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகம்படுத்தம்பட்டதன் பின்னர் தற்போது பாவனையில் உள்ள அடையாள அட்டை 2015 ம் ஆண்டு பாவனையில் இருந்து முற்றாக அகற்றப்படும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment