Sunday, July 26, 2009

ஊவா மாகாணத்தில் ஜே.வி.பி.க்கு பலத்த அடி


ஊவா மாகாண தேர்தலுக்கான வாக்குவேட்டையில் ஈடுபட்டுள்ள இனவாத கட்சியான ஜே.வி.பி.யினர் மீது தொடர்ந்தும் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக தெரியவருகின்றது.
ஜே.வி.பியின் தேர்தல் அலுவலகங்கள் தீவைக்கப்படுவது, தாக்கப்படுவது மற்றும் அச்சுறுத்தல் விடுப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் பிரதிப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜே.வி.பி.யின் ஊவா மாகாண முதலமைச்சர் வேட்பாளர் ஆர்.எம். ஜயவரத்னவிடம், சிங்கள நாளிதழான ராவய தொடர்புகொண்டு கேட்டபோது, இவ்வாறான 28 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறினார்.

இதுதொடர்பாக மொணராகல மாவட்டத்தில் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த அமைப்பு மேலும் தகவலளித்தது.


No comments:

Post a Comment