Friday, July 24, 2009

லசந்த கொலைச்சந்தேக நபருக்கான விளக்க மறியல் தொடர்கின்றது.

லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்து கொலைசெய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்கவின் கையடக்க தொலைபேசியை வைத்திருந்ததாக கைதுசெய்யப்பட்டுள்ள நபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்கிசை நீதிமன்றில் லசந்த கொலைவழக்கு விசாரணைக்கு வந்தபோது லசந்தவின் உரிமைகள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள், பொலிஸார் வழக்கு விசாரணையில் ஆர்வம் காட்டவில்லை என தெரிவித்ததுடன், விசாரணையை பிறிதொரு பொலிஸ் பிரிவினரிடம் கையளிக்குமாறும் வேண்டியிருந்தனர்.

விடயங்களை நன்கு செவிமடுத்த நீதிபதி விசாரணைகளை துரிதப்படுத்தி மன்றிற்கு விடயங்களை தெரியப்படுத்தும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment