Thursday, July 23, 2009

உடத்தலவின்ன கொலை வழக்கின் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டிருந்தோர் விடுதலை.

உடத்தலவின்னவில் 10 முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப்பட்ட கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தோர் இன்று உச்ச நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் திகதி தேர்தல் முடிவன்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் குற்றவாளிகள் என கொழும்பு நீதிமன்றினால் தண்டனை வழங்கப்பட்டிருந்த இராணுவ வீரர்கள் ஐவரும் மேல் முறையீட்டு நீதிமன்றில் செய்த முறையீட்டை அடுத்து, பிரதம நீதிபதி தலைமையில் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு அவர்களை நிரபராதிகள் என விடுதலை செய்துள்ளது.

இவ்வழக்கின் குற்றவாளிகள் மீதான குற்றங்களை நிருபிப்பதற்கான சாட்சியங்கள் சந்தேசங்களுக்கு அப்பால் நிருபிக்கப்படவில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவர்கள் முன்னாள் பாதுகப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த அவர்களின் பாதுகாவலர்களாகும்.

No comments:

Post a Comment