Thursday, July 9, 2009

பாராளுமன்ற வீதிப் பாவனைத் தடை நீக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் பாராளுமன்ற ஒன்று கூடல்கள் இடம்பெறுகின்றபோது பாராளுமன்றிற்கு செல்லுகின்ற வீதிகள் யாவும் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களின் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு, பாதுகாப்பு நிலமைகள் சீராகி வருகின்றமையை வெளிப்படுத்து முகமாக பாராளுமன்றவீதியை எந்த நேரமும் திறந்து வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதன் மூலம் கொழும்பு நகரில் இடம்பெறும் வாகனநெரிசல் நெருக்கடிகள் குறையும் என நம்பப்படுகின்றது.

No comments:

Post a Comment