Monday, July 20, 2009

அனைத்து பாதாளக் குழுக்களைச் சேர்ந்தவர்களும் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சரணடையவேண்டும். -கோத்தபாய-

இலங்கையில் செயற்படுகின்ற அனைத்து பாதாள உலக குழுக்களையும் சேர்ந்தவர்களை அண்மையில் உள்ள பொலிஸ் நிலையங்களில் அவர்களது ஆயுதங்களுடன் சரணடையுமாறு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் பாதாளக்குழுக்களுடன் தொடர்புகளை வைத்துள்ள அரசியல்வாதிகள் அக்குழுக்களுடனான தொடர்புகளை உடனடியாக துண்டித்துக்கொள்ள வேண்டும் எனவும் அவ்வாறு தொடர்ந்தும் தொடர்புகளைப் பேணுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் வியாபாரிகளிடமும், செல்வந்தர்களிடமும் கப்பம் பெறும் பாதாளக்குழுக்களுடன் சில பொலிஸ் உயரதிகாரிகள் தொடர்புகளை பேணி அவர்களுக்கான தகல்வளை வழங்கி உதவி வருவது தெரியவந்துள்ளது என தெரித்துள்ள பாதுகாப்புச் செயலர், அவ்வாறான பொலிஸ் அதிகாரிகள் சம்பந்தமான தகவல் தெரிந்த மக்கள் அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அத்தகவல்களை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க பலத்த அழுத்தத்திற்கு உட்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment