Saturday, July 18, 2009

நோர்வே பொலிஸாரை சாடும் முன்னைநாள் பொலிஸ் அதிகாரி.

பயங்கரவாதிகளை கையாளும் திறமை நோர்வே பொலிஸாரிடம் இல்லை என Olav Sønderland எனும் அந்நாட்டு ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி Aftenposten எனும் நோர்வே அரச பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

நோர்வேயில் உள்ள பயங்கரவாத அமைப்புக்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்ற ஆய்வொன்றை நாடாத்தி அறிக்கை வெளியிடுகையில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர், இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் துறையில் பாரிய ஓட்டைகள் காணப்படுவதாகவும், ஒரே தவறை அவர்கள் மீண்டும் மீண்டும் இளைப்பதாகவும், பயங்கரவாத தடுப்பு பொலிஸாருக்கும் சிவில் பொலிஸாருக்கும் இடையில் ஒத்துழைப்ப மந்தம் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பயங்கரவாதிகளை பின்தொடரும் டெல்ரா பிரிவினருக்கான பயற்சிகள் போதாது உள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment