Sunday, July 26, 2009

கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை முயற்சி செய்த மாணவி மரணம்.

கொழும்பு பிரபல பாடசாலை ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது ரையினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த கவந்தியா ஜெயவர்த்தன எனும் 9ம் வகுப்பு மாணவி நேற்று பிற்பகல் வைத்தியசாலையில் மரணம் அடைந்துள்ளார்.

பாடசாலையில் கையடக்க தொலைபேசியை பாவித்த நான்கு மாணவிகளை மாணவ தலைவி அதிபர் முன்நிறுத்தியபோது, அதிபரிடம் சிறு இடைவெளியை பெற்றுக்கொண்டு மலசல கூடத்திற்கு சென்று தனது ரையினால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்திருந்தார்.

No comments:

Post a Comment