Tuesday, July 28, 2009

'வயது வந்தவர்களுக்கு மட்டும்' தடை வருகின்றது.

இலங்கையில் "வயது வந்தவர்களுக்கு மட்டும்" என திரையிடப்படும் படங்கள் யாவையும் தடைசெய்ய அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக கலாச்சார அலுவல்கள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளளார். அத்துடன் படங்களில் ஆபாசக்காட்சிகளை உள்ளடக்கிக்கொள்கின்ற விடயங்கள் கடுமையாக பார்க்கப்படும் என்பதுடன் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதாகவும் கூறினார்.

அதேபோல் தொலைக்காட்சிகள், சஞ்சிகைகள் மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரங்களின் நிமித்தம் சமூகத்திற்கு ஒவ்வாத படங்களை பிரசுரிப்பதை தடுக்குமுகமாகவும் சட்டத்தில் திருந்தங்கள் கொண்டுவரப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment