Monday, July 13, 2009

புலிகளின் பல இரகசியங்கள் அம்பலம். புகைப்பட அல்பம் மீட்பு.

முல்லைத்தீவு பிரதேசத்தில் தேடுதலில் ஈடுபட்டுவரும் படையினர் புலிகள் இறுதியாக தங்கியிருந்த இடம் ஒன்றில் இருந்து ஆயிரக் கணக்கான புகைப் படங்கள் அடங்கிய அல்பங்களை மீட்டுள்ளனர். அப் புகைப்படங்களில் புலிகளின் ஆரம்ப காலம் தொட்டு இறுதி வரையான நிகழ்வுகள் யாவும் ஆவனப் படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இப் புகைப்படங்களில் புலிகளின் இரசசியத் சந்திப்புக்கள் பலவும் தெரியவந்துள்ளது. இப் புகைப்படங்களின் உதவியுடன் புலிகளுடன் இரகசிய தொடர்புகளை கொண்டிருந்த சகல தரப்பினரும் இனம்காணப்படுவர் என நம்பப்படுகின்றது. அத்துடன் புலிகளினால் இயக்கப்பட்டு வந்த சிறைகளில் புலிகளினால் தண்டனை வழங்கப்பட்டு அடைத்து வைக்கப் பட்டிருந்தவர்களின் புகைப்படங்கள் அடங்கிய அல்பம் ஒன்றும் அங்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இப் புகைப்பட அல்பத்தின் உதவியுடன் அவர்களில் எத்தனை பேர் புலிகளால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் எஞ்சியவர்களுக்கு என்ன நடந்தது எனவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment