Wednesday, July 15, 2009

கொலைக் குற்றவாளி ஒருவரை அமைச்சராக நியமிப்பதில் தவறேதும் இல்லையாம்.

விமல் வீரவன்ச தலைமையினலான தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பியசிறி விஜயநாயக்க அண்மையில் அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார். நந்தன பாலக எனும் ஜே.வி.பி உறுபினரின் கொலையுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இவர் அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.

கடந்த 14 ம் திகதி மகாவலி நிலையத்தின் இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் மாநாட்டின்போது கொலைக் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள ஓர் நபர் அமைச்சராக நியமனம் பெற்றுள்ளாரே, இதற்கு சட்டம் இட்கொடுக்கின்றதா என பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த, தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் நந்தன குணத்திலக, கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் ஓருவர் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வதில் எந்தத் தப்பும் கிடையாது, இது தொடர்பாக ஊடகங்கள் கேள்விகளை கிளப்புவதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும் எனக் கூறினார்.

No comments:

Post a Comment