Sunday, July 12, 2009

மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய புதிய இராணுவத் தளபதி ஆகின்றார்.

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக வன்னி கட்டளைத் தளபதியாக செயற்பட்டுவந்த மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரியா அவர்கள் எதிர்வரும் 15ம் திகதி நியமனம் பெறவுள்ளார். அதேநேரம் 15ம் திகதி ஓய்வுபெறும் ஜெனரல் சரத்பொன்சேகா பிரதம பாதுகாப்பு அதிகாரியாக பதிவியேற்கின்றார்.

அத்துடன் ஐந்து பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் களாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இராணுவத் திட்டமிடல் இயக்குனர் பிரிகேடியர் மகேஸ் சேனநாயக, ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் ஜகத் அல்விஸ், 22ம் படையணித் தளபதி பிரிகேடியர் ஜானக வல்கம, இராணுவ நிதி இயக்குனர் பிரிகேடியர் வீரதுங்கா, பிகேடியர் விஜெதுங்கா ஆகியோரே மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment