Thursday, July 9, 2009

பிரபாகரனின் மரணம் தொடர்பான உத்தியோக பூர்வ அறிக்கையை இந்தியா எதிர்பார்கின்றது.

இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கின் பிரதான குற்றவாளியான விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பான உத்தியோக பூர்வ அறிக்கையை இலங்கையிடம் இருந்து இந்தியா எதிர்பார்ப்பதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம் கிருஸ்ணா பாராளுமன்றத்தில் தொரிவித்துள்ளார்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என குறிப்பிட்ட எஸ்.எம் கிருஸ்ணா இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கையை விரைவுபடுத்துவதற்தாக நிலக்கண்னிவெடிகளை அகற்றுவதற்கென நான்கு குழுக்களை இலங்கைக்கு அனுப்பவுள்ளதாகவும் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் உட்பட 500 கோடி ரூபா வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment