Wednesday, July 8, 2009

வவுனியா பாடசாலைகள் பகிஸ்கரிப்பில்.

வவுனியாவில் கடந்த 4ம் திகதி மோட்டார் பைசிக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது இனம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பாரதிபுரம் வித்தியாலய அதிபர் நடராஜா ரமேஸ்கந்தா அவர்களின் கொலையை கண்டித்து இன்று வவுனியா பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் பகிஸ்கரிப்பில் இறங்கியுள்ளது.

இப்பகிஸ்கரிப்பு தொடர்பாக வவுனியா தெற்கு வலயக் கல்வி இயக்குனர் திரு. டீ.ஆர்.ஏ ஒஸ்வால்ட அவர்கட்கு மாணவர்கள், ஆசிரியர்கள், துறைசார் கல்வி யூனியனைச் சேர்ந்தோர் எழுத்து மூலம் தெரியப்படுத்தியிருந்ததாக திரு ஒஸ்வால்ட் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment