Saturday, July 11, 2009

இராணுவக் கப்டன் உட்பட ஆறு 6 படையினர் கைது.

அரச வங்கி ஒன்றின் பிரதி முகாமையாளர் ஒருவரின் கொலை சம்பந்தமாக இராணுவக் கப்டன் ஓருவர் உட்பட ஆறு படையினரை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 4ம் திகதி கொஸ்கம பிரதேசத்தில் உள்ள லபுகம எனுமிடத்தில் வைத்து அம்பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த வங்கி உதவி முகாமையாளர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இவர் கைது செய்யப்பட்டுள்ள இராணுவக் கப்டனின் நெருங்கிய சினேகிதர் எனவும், தனிப்பட்ட குரோதம் காரணமாகவே இக்கொலை இடம்பெற்றுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இரு கோப்ரல்களும் இரு சிப்பாய்களும் அடங்குகின்றனர்.

No comments:

Post a Comment