Saturday, July 25, 2009

50 கோடி ரூபா பெறுமதியான மருந்து பொட்களை அழிக்க நேரிட்டுள்ளது.

இரத்தமலானையில் உள்ள அரச மருந்தக களஞ்சியத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள 14 கொள்கலன் தரக்குறைவானதும், காலாவதியாகும் நிலையில் உள்ளதுமான மருந்துப்பொருட்கள் அழித்தொழிக்கப்பட உள்ளதாக தெரியவருகின்றது.

50 லட்சம் பெறுமதியான இம்மருத்துப் பொருட்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள மிதமிஞ்சிய தரகு வேலைகளால், தரக்குறைவான இம் மருந்துப்பொருட்களை வினியோகித்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலை தோன்றியுள்ளதாக அகில இலங்கை சுகாதார சேவைகள் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் திரு. காமினி குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

ஓப்பந்தத்தின் அடிப்படையில் காலாவதியாகும் அல்லது பழுதடையும் மருந்துப்பொருட்களுக்கு நஸ்டஈடோ அன்றில் மீழ் நிரப்பலோ பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் சுகாதார அமைச்சு இழப்பீட்டை பாரமெடுத்துக்கொள்ள நேரிட்டுள்ளது. அதேநேரம் இந்நிலைமையால் அரச வைத்தியசாலையில் மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment