மடவலப் பிரதேசத்தில் உள்ள வட்டகம எனுமிடத்தில் இடம்பெற்ற கலவரம் ஒன்றை அடக்கச் சென்ற பொலிஸார் மீது பிரதேச மக்கள் மேற்கொண்ட தாக்குதலில் வட்டகம பொலிஸ் பொறுப்பாதிகாரி சிந்தக்க பண்டார உட்பட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
300 மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இத்தாக்குதலில் பொலிஸாரின் இரு வண்டிகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் காமின நவரட்ண, இத்தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment