Monday, July 13, 2009

பாலியல் உணர்வூட்டும் 20 இணையங்கள் இயங்குகின்றன. தடை செய்ய நடவடிக்கை

இலங்கையில் இருந்து இயங்கும் பாலியல் உணர்வூட்டும் இணையத்தள இயக்குனர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது. இவ்வாறன 20 இணையங்கள் இலங்கையில் இருந்து இயக்கப்படுவதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் அவற்றை இயக்குபவர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விணையங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவை சட்ட நடவடிக்கைக்காக சமர்ப்பிக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment