Sunday, July 26, 2009

இந்தோனேசியாவில் 19 இலங்கையர்கள் கைது.

இங்கையில் இருந்து வெளியேறி ஐக்கிய நாடுகளை சபையின் அகதிகளுக்கான உயரித்தானிகம், லம்போக் இல் தங்கியிருந்த இலங்கை இளைஞர்கள் 19 சட்டவிரோத குடியேற்ற விதிகளுக்கமைய இந்தோனேசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயரிஸ்தானிகத்தில் இருந்து தப்பி ஓட முற்பட்டதாக கூறப்படுகின்றது.

இக்கைது கடந்த சனிக்கிழமை இடம்பெற்றதாக தெரிவித்துள்ள பென்குளு நகர பொலிஸ் பிரதம அதிகாரி Jhony Tri Satria மேலதிக தகவல்கள் எதையும் வெளியிட முடியாது என தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஆறுமுகம் சுசிகரன், மகேந்திரன் வர்ணன், சுப்ரமணியம், சோமசுந்தரம் விஜயராஜ், வேதநாயகம் ரெனோல்ட், தைகைவடிவேல் பகிரதன், குலசேகரம் சிறிஸ்வரன் ஆகிய எழுவரது பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment