Tuesday, July 14, 2009

மொத்த சனத்தொகையில் 1.5 சதவீதத்தினர் சிறைச்சாலைகளில்.

இலங்கையில் மொத்த சனத்தொகையில் 1.5 சதவீதத்தினர் சிறைச்சாலைகளில் உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் டி.சில்வா தெரிவித்துள்ளார். நீதி மற்றும் சட்ட அமுலாக்கல் அமைச்சராக புதிதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள அமைச்சர் மிலிந்த மொறக்கொட அவர்கள் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது நடந்த நிகழ்வில் பேசிய சிறைச்சாலைகள் ஆணையாளர் மேற்காண்டவாறு தெரிவித்ததுடன், அவ்வாறு சிறைகளில் உள்ளவர்களில் 36.5 வீதத்தினர் போதைப்பொருள் சம்மந்தமான குற்றங்களும், 25 சதவீதமானனோர் மதுபாணம் தொடர்பான குற்றங்களை புரிந்தவர்களுமாகும் என தெரிவித்துள்ளர்.

No comments:

Post a Comment