Wednesday, June 24, 2009

இடைத்தங்கல் முகாம் வாழ்வு மிகவும் கொடுமையானது. SB திசாநாயக்க.

இடைத்தங்கல் முகாம்களில் வாழும் மக்களின் வாழ்கைத்தரம் மிகவும் கவலைக்குரியதும் கொடுமையானதாகவும் இருப்பததாக தெரிவித்துள்ள ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் SB.திசாநாகயக்க மக்கள் சுதந்திரமாக வெளியேற அனுமதிக்கப்பட்டால் அவர்கள் இம்முகாம்களில் வாழ்வதைவிட மர நிழல்களில் வாழ்வதையே விரும்புவர் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தமிழ் மக்கள் சமத்துவத்தை உணரவேண்டிய நேரம். ஆனால் நாம் அவர்களை முகாம்களில் அடைத்து ஆத்திரமூட்டுகின்றோம் எனவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment