Tuesday, June 23, 2009

கிளிநொச்சி மாவட்ட நீதவான் கைது.

புலிகளின் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றின் பிரதான நீதவானாக செயற்பட்டுவந்த சுடர் என்பவர் வவுனியா மெனிக்பாம் இடைத்தங்கல் முகாம் ஒன்றில் இருந்து கைதுசெய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள இவரிடம் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரியவருகின்றது.

புலிகள் வடகிழக்கின் பெரும்பாலான பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் வைத்திருந்த காலத்தில் தமக்கென உருவாக்கியிருந்த அரசாங்கத்தில் நீதிதுறை ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே.

No comments:

Post a Comment